சுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு

2019-01-17

மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலையின் கால்கோள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி சுந்தரமதி வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் கால்கோல் விழா ஆரம்பமானதுடன், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், மற்றும் மாநகர சபை உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, சீ.ஜெயந்திரகுமார், ஐ.சிறிதரன், திருமதி. செல்வி மனோகர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டன

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks