துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மக்களின் பாவனைக்காக வீதிகள் திறந்து வைக்கப்பட்டன

2019-04-17

மட்டக்களப்பு மாநகர சபையினை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் சபை பொறுப்பேற்று முதலாவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி மாநகர முதல்வரின் “துரித அபிவிருத்தித் திட்டத்தின்” கீழ் மேற்கொள்ளப்பட்ட பல வீதிகள் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன.

மாநகர எல்லைக்குள் வதியும் மற்றும் தொழில் புரியும் மக்களின் வரிப்பணத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட 8 வீதிகள் இவ்வாறு திறந்து வைக்கபட்டன.

மாநகர பொறியியலாளர் த.தேவதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வீதிகளை மக்களின் பாவனைக்காக கையளித்திருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks