துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்யப்பட்டுகின்றது.

2019-01-05

மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நொச்சிமுனை சோதி ஒழுங்கையானது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இப்பாதையானது குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போக்குவரத்துக்கு செய்ய முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பாக அவ் வட்டார உறுப்பினர், மற்றும் பொது மக்களினால் மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டடிருந்தது.

இதனடிப்படையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இப்பாதையானது தற்போது துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மாநகர சபையினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks