திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2019-07-10

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மிக மோசமான நிலையில் உள்ள வீதிகளினை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு திருச்செந்தூர் தோமஸ் அன்டனி வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியானது கடந்த காலத்தில் மிகமோசமான நிலையில் இருந்தபோது அது தொடர்பில் வட்டார பிரதிநிதிகளும், பொது மக்களும் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் .

இதற்கமைய மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் மக்களாலும், மற்றும் தொழில் நிலையங்களை கொண்டு நடாத்துகின்ற வியாபார உரிமையாளர்களாலும் மாநகர சபைக்கு செலுத்தப்பட்ட வரிப்பணத்தின் ஊடாக மாநகர சபையின் ஆளணி மற்றும் இயந்திரங்களின் உதவிகளுடன் இந்த வீதியினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks