மட்டு மாநகர முதல்வர் கிழக்கு ஆளுனருடன் சந்திப்பு-அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன

2020-01-17

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் இன்று(17) கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் அவர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டதுடன், முக்கியமாக மட்டு நகரில் வெள்ள காலங்களில் பூரணத்துவமான வடிகான் வசதிகள் இல்லாமையால் மக்களின் அசௌகரிய நிலைமை குறித்தும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மாநகர வீதிகள் அபிவிருத்தி தொடர்பாகவும் மற்றும் வேலைவாய்ப்பு ஆளணி வெற்றிடங்களில் புதியவர்களை நியமனம் செய்தல் போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் பற்றியும் முதல்வர் அவர்களால் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks