மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2020-01-22

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆணைப்பந்தி இராமகிருஸ்ண மிசன் மகளீர் வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இன்று (21.01.2020) இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

குறித்த பாடசாலையின் அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான ம.ரூபாகரன், அ.கிருரஜன், வி. பூபாலராஜா ஆகியோருடன் மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks