கருவேப்பங்கேணி விபுலானந்தா மற்றும் மாமங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2020-01-25

மாணவர்களின் கல்வி தரத்தினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (24.01.2020) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புறநகர் பகுதிகளில் வசிக்கும் வறிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்திலும், இடைவிலகல்களை குறைத்து, மாணவர்களுக்கு கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி, ஸ்ரீ மாமங்கேஸ்வரர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வழங்கி வைத்தார்.

பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான வே,தவராஜா, கு.காந்தராஜா, த.இராஜேந்திரன் ஆகியோருடன் மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் ச.சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks