வாணி விழா

2022-10-04

மட்டக்களப்பு மாநகர சபையின் #வாணி_விழா நிகழ்வானது நேற்றைய (04) தினம் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராசா அவர்களின் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

பஜனை நிகழ்வுகள், தேவார பாராயணம், சொற்பொழிவு, தீபாராதனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சொற்பொழிவினை ஓய்வு பெற்ற அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்கள் ஆற்றினார்.

நிகழ்வில் மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் திரு. க.சத்தியசீலன், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபையின் பிரதம கணக்காளர் திருமதி. ஜி.ஹெலன் சிவராஜா, மாநகர சபையின் பொறியியலாளர் திருமதி. சித்ராதேவி லிங்கேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. பா.நடேசமூர்த்தி மற்றும் உத்தியோகத்தர்கள் - ஊழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks