புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா

2022-09-27

மட்டக்களப்பு மாநகர சபையின் புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்றைய தினம் (27) சிறப்பாக நடைபெற்றது.

புனித அந்தோனியார் ஆலயத்தின் திருப்பலியானது காலை 10.30 மணிக்கு அருட்பணி டி.எப். லோரன்ஸ் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து திருப்பலியில் கலந்து கொண்டவர்களுக்கு மாநகர சபையின் பணியாளர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டு ஆலய திருவிழா இனிதாக நிறைவு பெற்றது .

இவ்விழாவில் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் திரு. கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் திரு.உ.சிவராஜா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks