மாநகர சபை உத்தியோத்தர்களின் இஃப்தார் நிகழ்வு

2023-04-19

மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோத்தர்களின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இஃப்தார் நிகழ்வு மாநகர பிரதி ஆணையாளர் திரு. உ.சிவராஜாஅவர்களின் தலைமையில் 19.04.2023 ஆம் திகதி அன்று மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இடையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மேற்படி இஃப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் திரு. என்.மதிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்.

நிகழ்வில் இஃப்தார் நிகழ்வுக்கான விசேட உரையினை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மௌலவி எஸ்.எல்.எம். நஷ்மல் பலாஹி அவர்கள் ஆற்றியிருந்தார். அத்துடன்இந் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks